Thursday, June 14, 2018

முதற்கனல் வாசிப்பனுவம் 5

சிகண்டி .

வெண்முரசு  ஒருவிதத்தில் மறுபிறவி  மாதிரியான யதார்த்தத்திற்குள் வராத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் இருந்து விலகி நிற்கிறது என சொல்லலாம் , முக்கியமாக சிகண்டியின் கதை வழியாக .

சிகண்டி அம்பையின் மறு பிறவி என்று பிற மகாபாரத  கதைகள் சொல்கிறது .  வெண்முரசு வேறொரு கவித்துவ கதை வழியாக அம்பையின் மகனாக சிகண்டியை  கொண்டு வருகிறது   .

சிகண்டியின் கதையை பிற இடங்களில் தேடினேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன !  பொதுவான ஒற்றுமை என்பது பாஞ்சால மன்னன் துருபதனின் மகள் , பின்   ஸ்தூணகர்ணன் வழியாக ஆணாக மாறுகிறாள்  . ஒரு கதையில்  பெற்றோரின்  வருத்தத்தினால்  தற்கொலைக்காக காடேகிய  போது ஸ்தூணகர்ணனின் மாளிகைக்கு  சென்று ஆணாக ஆவது என  , இன்னொன்றில்  மனைவி யின் இகழ்ச்சி  காரணமாக வெளியேறி  மாறியது என  , இன்னொன்றில்  ஒரு கந்தர்வன்  பாலினம் மாறி கொள்ளலாமா  என கேட்டு , கந்தர்வன் பெண்ணாகவும்  சிகண்டி ஆணாகவும்  மாறி கொள்வது என .

இந்த கதைகளை விட வெண்முரசில் வரும் சிகண்டியின் வரலாறு  சிறப்பான ஒன்று , இதில் வரும் கவித்துவம் மற்ற கதைகளை விட இதை சிறப்பானதாக்கி  விடுகிறது . இக்கதையில்  சிகண்டி ஒரு பெயரற்ற  அநாதை பித்தியின் மகள் , சிகண்டி பிறந்த சில நாட்கள்உள்ளாகவே   அவள் இறந்தவுடன்  அங்கிருந்த  இன்னொரு பித்தியான  அம்பையிடன்  இணைந்து கொள்கிறாள் சிகண்டி , அம்பையை அன்னையாக எண்ணுகிறாள் , அம்பை அவளை தன் மகனாக உணர்கிறாள்   , அம்பை அப்படி உணர்ந்ததனாலேயே தன்னை ஆணாக மாற்றி கொள்கிறாள் சிகண்டி  , அவளின் வேண்டுதலை  நிறைவேற்றவே  பீஷ்மரை கொள்ளும் சபதமேற்கிறாள்  சிகண்டி .

இந்த நாவலில் வரும் ஸ்தூணகர்ணன் சிகண்டி சந்திப்பு  உருக்கம்  நிறைந்த ஒன்று , ஸ்தூணகர்ணன் முதுதந்தையாக  , முதுதாயாக வெல்லாம் மாறி மாறி வந்து இப்படி மாறி கொள்வதன் வரும் விலகலை ,இழப்பை  ,வலியை சொல்லிகெஞ்சுகிறான் , சிகண்டியின் நினைவில்  அன்னையின் சொல் தவிர  வேறில்லை , அதற்காக தன்னை முழுவதுமாக தருகிறான் , அது ஒன்றிற்காக மட்டுமே வாழ்கிறான்  . சுய விருப்பம் என்ற ஒன்றில்லாத , முற்றிலும் தன்னை இன்னொருவருக்காக தியாகம் செய்த ஒரு லட்சிய பாத்திரம் இந்த நாவலில் வரும் சிகண்டி .

தியானத்தில்  அலைபாயும்  மனம் பின்பு அடங்கி பின் 'தான்' மறைவதை  போல இந்நாவலில் சிகண்டி தன் நோக்கமான  பீஷ்மரை கொல்லுதல் என்ற எண்ணத்தில்  ஒன்றிணைகிறார்  .  நாவலில் பீஷ்மரை அறிய முயலும் பகுதிகள் அபாரமாக  வந்துள்ளன  . பீஷ்மரை தந்தையாக உணர்கிறார் , தன்னை போலவே அவரும் இன்னொன்றிக்காக    வாழ்பவர் என்பதை உணர்ந்தும் , அன்னையின் அன்பும் அவரில் இருக்கிறது  என்பதை உணர்ந்தும் நேசம் கொள்கிறார் .

இந்நாவலில் சிகண்டி வராகியின்  அம்சம் கொண்டவளாக  வருகிறாள்  .

இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் அம்பை சிகண்டி கதையில் வருகிறது , அம்பை கதையில் வரும் முருக கடவுள் படிமம் , நாவலில் அம்பை முருகக்கடவுள்  கடவுள் கழுத்தில்  இருந்த செங்காந்தள்  மாலையை  பாஞ்சால  கோட்டை   வாயிலில் மாட்டுகிறாள்  , பிறகு அங்கு ஒரு கொற்றவை (அம்பை ) கோவில் வந்து  அந்த தெய்வத்திற்கு  செங்காந்தள் மாலை அணிகலனாக  சூட்டப்படுகிறது  (  தினமும் ) , பிறகு அங்கு வரும் சிகண்டி அம்மாலையை  எடுத்து தான் அணிந்து கொள்கிறாள் , இன்னொரு பிற நூலில் இந்த மாலையை அணிந்ததால்  சால்வ மன்னன்  தன் மகளான சிகண்டியை பீஷ்மர்க்கு பயந்து வெளியேற்றுகிறார்  என்று வருகிறது  .

No comments:

Post a Comment

ஆசிரியர் ( சிறுகதை )

 90 ஆண்டு கால கட்டடம் அது, செங்கல்க்கு பதில் கற்கள் அடுக்கி கட்டப்பட்டிருக்கும், மேலே ஓட்டு கூரை, சுவர் உயரம் எப்படியும் 15 அடி வரும், கற்கள...