Saturday, June 2, 2018

முதற்கனல் நாவல் வாசிப்பனுபவம்- 2

நான்கு வருணங்கள் என்பது எப்போதுமே நம் சூழலில் ஒரு விவாத பொருள் , இது பிறப்பால்  உருவாவது எனவும் இந்த வேறுபாட்டை  உருவாக்கியவர்கள்  பிராமணர்கள் எனவும் நிறுவப்பட்ட  உண்மையாக ஆக்கப்பட்டு  விட்டது . முதற்கனல் இதை தகர்க்கும்  விரிவான சித்திரங்களை  வைக்கிறது .

நாவலின் ஒரு சுவாரஸ்யமான இடத்தில் இருந்து இதை சொல்ல முடியும் , பீஷ்மர் கங்கர்கள் எனும்   குலத்தை சேர்ந்தவர் , பீஷ்மர் வழியாக  அஸ்தினபுரியின் ஆளுகைக்குள்  கங்கர் குலம் உள் வருகிறது  ,  பேரரசின் தொடர்பிற்கு பிறகு கங்கர் குலம் நான்கு வருணங்களாக  பிரிகிறது என்பது , அதாவது ஒரே குல மக்கள் தங்களை நான்கு வருணங்களாக பகுத்து  கொள்கின்றனர் . ஒரு தனிகுடியாக  தங்களை தாண்டி வெளியுலகம்  இல்லாதவர்களாக வாழும்பொழுது அவர்கள்  தேவைகள்  மிகவும் குறைவு , பகுத்து நிற்கவேண்டிய அவசியம்  இல்லை , வெளியுலகுடன்  இணையும் பொழுது தேவைகள் ,வாய்ப்புகள் பெருகுகின்றது  , பகுப்புகள் தேவை படுகின்றன, வர்ணங்கள்  உருவாகிறது .

இன்னொன்று வளம்தான்  அரசுகளை  உருவாக்குகின்றன , அப்படி உருவாகும் அரசுகள் அரச இயல்பான சத்ரிய வருணத்திற்குள்  வருகின்றன , அப்படி அரசுகள் உருவாகி வரும் சித்திரம் நாவலில் விரிவாக வருகின்றன .

மேலும் பெரும்பாலும் வருண தூய்மை  என்பது தொன்மையால்  தான் தீர்மானிக்க படுகின்றன  , முதலில் உருவான அரச குடிகள் தங்களை தூய்மையானவர்களாக  முன்னிறுத்துகின்றன  . இதை சாதாரணமாக எல்லா விஷயத்திலும் காணமுடியும்  , பழையவர்கள்  புதியவர்களை  தங்களுக்கு இணையாக எப்போதும் வைக்க மாட்டார்கள் , மாறாக ஒரு படி கீழேதான் வைப்பார்கள்  , சாதிய அடுக்குமுறைக்கான முக்கியமான காரணம் என்பது இந்த இயல்புதான் .

அஸ்தினபுரி  உட்பட முதலில் எழுந்த  பேரரசுகள் தங்களை தூய சத்ரிய   குலங்களாக முன்வைத்தன  , அதன் அதீதம்தான்  தங்களை வானோர்களின்  வழிவந்த குருதிகளாக  சொல்லும் இயல்பு . இந்நாவலில்  ஒவ்வொரு அரசிற்கும் விரிவாக  வம்சவரலாறு  சொல்லப்படுகிறது . இதை ஞாபகம் வைத்துக்கொள்வதுதான்  இந்நாவலை வாசிப்பதில் இருப்பதிலேயே  கடுமையான விஷயம் :)

  குல தூய்மை என்பதை பகடியாக  மாறும் இடமும் இதில் வருகிறது , குருவம்சத்து  திருதராஷ்டினனும்  பாண்டுவும்  மீனவ உதிரங்கள் . இது நாவல் நிகழும் இடங்கள் சுவாரஸ்யமானவை  . சாதாரண மீனவ பெண்ணான சத்யவதி  சந்தனுவின்  மனைவியாக  அஸ்தினபுரி தொடர்ச்சியில் இணைகிறாள்  , சந்தர்ப்பம் வாய்க்கும்போது தன் அஸ்தினபுரி  உதிரம் சாராத  உதிரமான வியாசன்  வழியாக அஸ்தினபுரியின்  உதிர தொடர்ச்சியை  மாற்றி தன் மீனவ உதிர தொடர்ச்சியாக  அமைக்கிறாள்  . எந்த மனமுறை மூலமாக சத்திரியர்கள் தங்கள் அரசுகளை விரிவாக்குகிறார்களோ  ,அதே மனமுறையில்  உள்ளே வந்து சத்ரிய உதிரத்தையே மாற்றி தன்னுடைய குல தொடர்ச்சியாக ஆக்குகிறாள்  சத்யவதி .

இந்த நாவலின் இன்னொரு சிறப்பம்சம்  என்பது குலசூழல் என்பது  அனுபவமாக நல்ல அம்சமுமாக சொல்லபடுவது . வியாசனுக்கு  மீனவ குல பின்னனி என்பது ஒரு தனியான  வாழ்பனுபவம் , அந்த வாழ்பனுபவம்தான்  வைஸ்வாநரன்  கவிதையின்  உட்பொருளை அவரினுள் உணர்த்த  வைக்கிறது .

No comments:

Post a Comment

ஆசிரியர் ( சிறுகதை )

 90 ஆண்டு கால கட்டடம் அது, செங்கல்க்கு பதில் கற்கள் அடுக்கி கட்டப்பட்டிருக்கும், மேலே ஓட்டு கூரை, சுவர் உயரம் எப்படியும் 15 அடி வரும், கற்கள...